செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் துணை ராணுவ படையினர் குவிப்பால் பரபரப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. அவருடைய சென்னை, கரூர் வீட்டில் சோதனை நடந்தது.

இந்த 17 மணி நேர சோதனை நிறைவடைந்த நிலையில் நள்ளிரவு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தார். உடனே அவரை அமலாக்கத் துறையினர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரிடம் மனித உரிமை மீறல் நடந்ததாக மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தியதாகவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் மிசாவையே பார்த்துள்ளோம். இந்த வழக்கெல்லாம் எங்களுக்கு பெரிய விஷயமே இல்லை என்றார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications