பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

விஜய் தலைமையிலான அரசு கிட்டத்தட்ட கைவிட்டதாக கருதப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து தாமதப்படுத்தினாலும், மத்திய அரசின் தலையீடு காரணமாக இதை முழுமையாக நிறுத்த முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமையக்கூடும் என எதிர்பர்க்கப்படுகிறது.

சென்னைக்கு இரண்டாவது பெரிய விமான நிலையம் அவசியம் என்பதை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த திட்டம் தென் மாநிலங்களின் முக்கிய நுழைவாயிலாக செயல்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.

Parandur airport Central government Parandur project Vijay government Parandur Tamil Nadu second airport Parandur airport fast track DMK MP Wilson Parandur Central committee Parandur airport Vijay CM Parandur meeting Parandur airport land issue Tamil Nadu aviation growth

மத்திய அரசின் தனிக்குழு அமைப்பு

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை விரைந்து வழங்கவும், நிதி மற்றும் நிலம் தொடர்பான சிக்கல்களை தீர்க்கவும் மத்திய அரசு தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், விமான நிலைய ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். மாநில அரசின் சிறப்பு அதிகாரி ஒருவரும் இந்த குழுவில் உறுப்பினராக உள்ளார்.

இந்த குழு திட்ட பணிகளில் ஏற்படக்கூடிய நிர்வாக, நிதி மற்றும் நிலம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் பணியை மேற்கொள்ளும். மத்திய அரசு இந்த திட்டத்தை வளர்ச்சி நோக்கிலான முயற்சியாகவே பார்க்கிறது. கடந்த கால அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் அடுத்தகட்ட அனுமதிகள் சாதகமாக அமையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரந்தூர் திட்டத்தின் பொருளாதார முக்கியத்துவம்

பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அளிக்கும் திட்டமாக மத்திய அரசு கருதுகிறது. இந்த விமான நிலையம் உருவானால் விமான சேவைகள் விரிவடையும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார மண்டலம் அமைவது அவசியம் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம் வர்த்தகம், முதலீடு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் ஊக்கம் கிடைக்கும். தென் மாநிலங்களின் முக்கிய நுழைவாயிலாக சென்னை செயல்படும் வாய்ப்பு உருவாகும். இதற்காக தேவையான நிலங்களை மாநில அரசு விரைந்து கையகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜயை சந்திக்க மத்திய அதிகாரிகள் திட்டம்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வறிக்கையை தயாரித்து, முதல்வர் விஜயை சந்திக்க விமான நிலைய ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பில் திட்டத்தின் அவசியத்தை விரிவாக விளக்க உள்ளனர்.

சென்னைக்கு இந்த விமான நிலையம் தேவை என்பதை மத்திய அரசு தெளிவாக தெரிவிக்க உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பரந்தூர் திட்டம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய அரசு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதிகளை விரைந்து வழங்க தயாராக உள்ளது.

தற்போதைய நிலை

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக பரந்தூர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 5600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அரசுக்கு சொந்தமான நிலங்களைத் தவிர்த்து 3700 ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 1700 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+