பரனூர் சுங்கச்சாவடியிலா இப்படி ஒரு சம்பவம்.. வியந்த டோல்கேட் ஊழியர்கள்
சென்னை: தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுள்ளது. நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 வாகனங்கள் மட்டுமே கடந்து சென்றதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். தீபாவளி நாளான நேற்று சென்னை மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையை ஒட்டியுள்ள பரனூர் சுங்கச்சாவடியிலும் அது எதிரொலித்தது.
சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி என்பது சென்னையின் மிக முக்கியமான சுங்கச்சாவடி ஆகும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் , கோவை ,திருப்பூர் , ஈரோடு, சேலம், செல்லும் பேருந்துகள் , தஞ்சாவூர் அரியலூர் , பெரம்பலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் வாகனங்கள் செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.

இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் கடந்த ஒரு வாரமாகவே பரனூரில் நெரிசல் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமை லட்சக்கணக்கான வாகனங்கள் சென்றன. நேற்று முன்தினம்.. அதாவது புதன்கிழமை அன்று விடிய விடிய வாகனங்கள் சென்றன. இப்படி தீபாவளிக்கு மூன்று நாளைக்கு முன்பு சுமார் 10 லட்சம் வாகனங்கள் சென்றன.

இதனால் சுங்கச்சாவடியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். ஆனால் தீபாவளி அன்று வாகனங்கள் எதுவுமின்றி பரனூர் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 வாகனங்கள் மட்டுமே கடந்து சென்றதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications