சென்னை சதாப்தி ரயிலுக்குள் அருவி போல கொட்டிய மழை.. இதுதான் சொகுசா? திட்டி தீர்த்த பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சொகுசு ரயில் பயணம் ரணமான பயணமாக மாறிவிட்டதாக பயணிகள் ஆதங்கப்பட்டனர். ரயிலுக்குள் மழை நீர் ஒழுகும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு சதாப்தி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு செல்கிறது. சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவைக்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கோவையில் 3.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை செண்டிரல் ரயில் நிலையத்திற்கு இரவு 10.15 மணிக்கு வந்து சேரும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது.
சதாப்தி எக்ஸ்பிரஸ்: தினசரி இயக்கப்படும் இந்த ரயில், முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது ஆகும். சொகுசு ரெயில் என்பதால், கோடை வெயிலில் நிம்மதியாக பயணம் செய்ய பயணிகள் பலரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலிலை பயன்படுத்தி வருகின்றனர். கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் ஏசியில் பயணிக்க முடியும் என்பதால் இந்த ரயிலை கோடை காலத்தில் பயணிகள் அதிகம் விரும்பி செல்கிறார்கள்.
பயணிகள் அவதி: இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று சென்னையில் இருந்து கோவை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் கோவை பீளமேடு அருகே ரெயில் செல்லும் போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. பயணிகளும் மழையை ரசித்துக் கொண்டு இருந்தனர். திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் உள்ள பயணிகள் மட்டும் மழையால் அவதிக்குள்ளாகினர்.

அருவி போல் ஒழுகியது: அதாவது, ரயிலின் 'சி - 7' பெட்டியில் திடீரென மழை நீர் ஒழுகியது. ரயில் பெட்டியில் இருந்த மின்விளக்கின் மேற்புற பகுதியில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்டியது. இதனால், அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரயிலுக்குள் மழை நீர் ஒழுகிய காட்சிகளை சில பயணிகள் வீடியோ எடுத்து தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்: இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள், 'சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் மட்டுமே மழைநீர் ஒழுகியது. சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்ததும் குறிப்பிட்ட ரயில் பெட்டியின் பழுது சரிசெய்யப்படும்' என்றார்.
பயணிகள் கொதிப்பு: சென்னையில் இருந்து கோவைக்கு சதாப்தி ரயிலில் பயணிக்க பயணி ஒருவருக்கு 1,370 ரூபாய் கட்டணமும் EC கோச்சில் 2085 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் அதிகமாக இருந்தாலும் சொகுசாக பயணம் செய்யலாமே என்றால் ரயிலை மோசமாக பராமரித்து பயணிகளுக்கு இன்னலை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்துவதாகவும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கூறினர்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications