விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்... அடித்துச் சொல்லும் பழ.கருப்பையா!
Recommended Video
சென்னை : நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா என்ற தலைப்பில் சென்னை வேப்பேரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, சுப.வீரபாண்டியன், பழ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பழ. கருப்பையா சர்கார் படத்தை பார்த்து சிலர் பயப்படுவதாக தெரிவித்தார். படம் தணிக்கை செய்து வெளியான பிறகு காட்சிகளை நீக்கக் கோருவது சரியல்ல, படத்தில் கதாபாத்திரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. சர்கார் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்கும் படமல்ல. என்னடைய கருத்து நிச்சயமாக விஜய் அரசியலுக்கு வருவார். நான் அவருடன் இந்த படம் முழுவதும் பயணித்திருக்கிறேன். அவரிடம் ஒரு உறுதி இருக்கிறது.
தன் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்கு திரும்ப ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் எப்ப அரசியலுக்கு வருவார் என்று எனக்குத் தெரியவில்லை. 40 வயதில் 25 வயது இளைஞன் போன்ற உடலமைப்பு அவருக்கு இருக்கிறது. திரைத்துறையிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது, எனவே அவர் இப்போது அரசியலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் உறுதியாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று மட்டும் சொல்ல முடியும் என்று பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.