எந்த புகார்னாலும் இரண்டே நிமிஷம் தாங்க நடவடிக்கை எடுக்க.. சென்னை காவல் ஆணையர் பேட்டி
சென்னை: தலைநகர் சென்னையை பொறுத்த வரை மக்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் தேர்தல் தொடர்பாக எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தேர்தல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது, 2 நிமிடங்களில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. சிறு பிரச்சினை என்றாலும் உடனே தீர்க்கப்படுகிறது. உடனுக்குடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடுகிறார்கள்.

வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இதுவரை எவ்வித அச்பாவிதத்திற்கும் இடமளிக்கப்படவில்லை என்றார். பிரச்சனைக்குரிய சமூக விரோதிகள் மீது ஏற்கனவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தற்போது சென்னையில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம் என்றார் ஏ.கே.விஸ்வநாதன்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications