தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்..ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
சென்னை: இந்தியாவில் தொடர்ந்து ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை ஒடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டும்தான். தடுப்பூசி ஒன்றுதான் கொரோனாவை முழுமையாக ஒழிக்கும்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு பிரதானமாக போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போடுவதில் தொடக்க காலத்தில் தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிகுந்த ஆர்வதத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஆனால் பிரதமானமாக 2 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதால் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் மையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் தடுப்பூசி இல்லாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
நிலைமை இப்படியிருக்க தமிழ்நாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடதப்பட்டது. தொற்று அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 80.3 சதவீத ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
18 முதல் 44 வயதுடையர்கள் 16.9 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டியுள்ளனர். , 45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27.6 சதவீதம் பேர் தடுப்பூசி குறித்து மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் நகர் புறங்களில் 82.5 சதவீதம் பேரும், கிராம புறங்களில் 79.7 சதவீத பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications