Kumba Rasi Palan: கும்ப ராசிக்கு அதிரடி மாற்றங்கள்.. நினைத்தது எல்லாம் நடக்கப் போகுது!
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் கும்ப ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் கும்ப வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் கும்ப ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு எதிரிகளை தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகத்தில், வியாபாரத்தில், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்குகளை காப்பாற்றக்கூடிய அமைப்பு ஏற்படும். சுப விரயங்கள் காணப்படும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய மாதம். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். இருப்பினும், அவை சுப செலவுகளாக இருக்கும்.
மகிழ்ச்சி
எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய அமைப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இந்த வைகாசி மாதம் முதல் நல்ல மாற்றங்கள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. உங்களுக்கு இந்த வைகாசி மாதம் வசதிகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும்.
தொழில்
குடும்ப வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் நிலவும். வீட்டில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து மனநிறைவு ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். லாபம் அதிகரிக்கும் சூழல் காணப்படும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைத்து தன்னம்பிக்கை உயரும்.
ஒற்றுமை
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை தரும். திருமணமானவர்களுக்கு இந்த காலம் மகிழ்ச்சியும் புரிதலும் நிறைந்ததாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
வழிபாடு
ஓய்வு, உணவு பழக்கம் மற்றும் உடல்நல பராமரிப்பில் அக்கறை காட்டினால் இந்த மாதத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ரத்தத்தில் பரவக்கூடிய தொற்றுநோய் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications