"பஸ் ஏன் சார் லேட்டா எடுக்கறீங்க?".. பெண் பயணி கேட்டதுதான் தாமதம்.. டிரைவர் தாக்கியதாக புகார்
சென்னை: பேருந்தை தாமதமாக எடுத்ததை தட்டிக் கேட்ட பெண்ணை பேருந்து ஓட்டுநர் அடித்து தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருமதா. இவரும் இவருடைய கணவர் செந்திலும் பாரிமுனை செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர்.
அங்கு 5.10-க்கு பெரும்பாக்கத்தில் இருந்து பாரிமுனை செல்ல வேண்டிய பேருந்தை 5.30 மணி ஆகியும் எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கண்டிப்பு
இதுகுறித்து ஓட்டுநரிடையே கேட்டபோது அவர் மிகவும் கண்டிப்பாக காத்திருங்கள். இல்லையென்றால் இறங்கி போய்கிட்டே இருங்கள் என சொல்லிவிட்டு டிரைவர் ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால் தம்பதி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெண் மயக்கம்
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி அவர்களை தாக்கியதில் முருமதா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட மற்ற பொது மக்கள் பேருந்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சரியா
மேலும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததினால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில் பேருந்து புறப்பட தாமதம் ஏன் என கேட்டது ஒரு தவறா? அதற்கு போய் அந்த ஓட்டுநர் அந்த தம்பதியை கண்டபடி பேசி தாக்கியுள்ளார். பெண் என்றும் பாராமல் இப்படி தாக்குவது சரியா?

அலைகழிப்பு
இப்படித்தான் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகளை அலைக்கழித்து வருகிறார்கள். பேருந்து எப்போது எடுப்பீர்கள் என்றோ எத்தனை மணிக்கு போய் சேரும் என கேட்டாலோ டிரைவர் கொந்தளித்து விடுகிறார். அது போல் டிக்கெட்டுக்கு கொடுத்த காசில் மிச்சம் சில்லறை கொடுங்கள் என நடத்துநரிடம் கேட்டால் போதும், அவரும் பயணிகளை வறுத்தெடுப்பார் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இனியாவது பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications