கொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!
சென்னை: கொரோனா பரவல் அச்சம் எதுவும் இல்லாமல் இன்று மீன் சந்தைகளில் பெருமளவு மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கடைபிடிக்காமல் மக்கள் இப்படி பொதுவெளியில் நடமாடுவது பெரும் கவலைக்குரியதாகும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. புதிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அச்சமின்றி நடமாட்டம்
பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி அவசியம் என்பது உள்ளிட்டவை தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் இதனை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் மக்கள் இன்னமும் அச்சமின்றி நடமாடுகின்றனர்.

வாகனரம் சந்தை
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை அடுத்த வானகரம் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியது. அதிகாலை முதலே மீன்கள் வாங்க காலை முதலே மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் பலரும் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர். கொரானோ விதிகளை பின்பற்றாமல் முககவசம் அணியாமல் மீன்வாங்க வந்தவர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ரூ200 அபராதம் விதித்து திருப்பி அனுப்பினர்

காஞ்சி மீன்சந்தை
இதேபோல் காஞ்சிபுரம் மீன்சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம் பொன்னேரி கரை மீன் சந்தை பகுதியில் ஏராளமான மீன் வகைகளை வாங்கிச் செல்ல ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடினர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடி வருவதால் சமூக இடைவெளியின்றி காணப்பட்டது.

கட்டுப்பாடுகள் தேவை
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீன் வரத்து குறைவாகவும் விலை அதிகமாகவும் இருக்கிறது. ஆனாலும் அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்க குவிந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் இப்படி ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications