சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா.. கையெடுத்து கும்பிட்டு குமுறி அழுத பெண்கள்
சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரணைக்காக சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து சென்ற போது சாலையில் கூடியிருந்த மக்கள் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டனர். மேலும் அங்கிருந்த பெண்கள் குமுறி அழுதனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்தனர்.
ஏழை மாணவிகள், ஹாஸ்டல் மாணவிகளை சொகுசு அறைக்கு வரவழைத்து அவர்களிடம் பாலியல் சீண்டல் செய்து பின்னர் அவர்களின் வாழ்வை நாசமாக்குவதுதான் இந்த பாபா செய்த வேலை என புகார்கள் மூலம் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலம் சென்ற சிவசங்கர் பாபா , அங்கிருந்து டெல்லி தப்பிச் சென்ற போது சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

காவல்
இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த அவரை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சுஷில் ஹரி சர்வதேச பள்ளிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

கையெடுத்து கும்பிட்ட மக்கள்
அப்போது அவர் வருவது தெரிந்து சாலைகளில் அப்பகுதி மக்கள் கூடினர். அவரை பொதுமக்கள் தாக்கிவிடக் கூடாது என போலீஸார் பாதுகாப்பை அதிகரித்தனர். ஆனால் மாறாக அவரை பார்த்த மக்கள் கையெடுத்து கும்பிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்
இந்த சம்பவத்தை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கொந்தளித்துள்ளனர். சிறு குழந்தை என்று கூட பார்க்காமல் 6 ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு மாணவிகளிடம் கூட அத்துமீறிய இந்த சிவசங்கர் பாபாவுக்கு இத்தனை வரவேற்பா என இணையத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications