பெரம்பலூர் சுங்கச்சாவடிக்கு போதிய பாதுகாப்பு தரவில்லை.. போலீசுக்கு எதிராக ஹைகோர்டில் அவமதிப்பு வழக்கு
சென்னை: பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக பதிவான வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி திருமாந்துறை சுங்கச்சாவடியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் செல்லதுரையின் குடும்பத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் சுங்கச்சாவடி பணிகளை தடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, அங்குள்ள ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், செங்குறிச்சி மற்றும் திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளில் போதிய காவல்துறை பாதுகாப்பை வழங்குமாறு கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் எஸ்பி-களுக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான தொகை சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என கூறி பெரம்பலூர் எஸ்.பி. எஸ்.மணிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டோல்கேட் நிறுவனம் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் இந்து கருணாகரன் ஆஜராகி, 15க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும், முன்னாள் ஊழியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாமல் போராடினர் என்றும், திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஊழியர்களைப் பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுங்கச்சாவடியில் நடந்த தாக்குதல் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய விசாரணை நடத்தி 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.-க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications