"ஆரியர்கள் வந்தேறிகள்" நச்சு கருத்தை திணிக்க முயற்சித்தார் பெரியார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை: ஆரியர்களை வந்தேறிகள் என்பதை இங்கே திணிக்க முயற்சித்தவர் பெரியார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆரியர்கள் மிகவும் அறிவுப்பூர்வமானவர்களாக இருந்தார்கள் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல் சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சிந்து சமவெளி நாகரிகம் சார்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருள் மீதான பார்வைகள், தொல்பொருளியல் மீதான பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், உலகில் 3 இனங்களாக பாகுபாடுகள் இருக்கின்றன.

முதல் வெள்ளை நிறம், 2வது மஞ்சள் மற்றும் 3வது கருப்பரினம். இதில் மிகவும் உயர்ந்தவர்களாக வெள்ளை இனத்தவரை கருதுகிறார்கள். 1850களில் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடு இருந்தது. வினஸ்டன் சர்ச்சில் மற்ற இனத்தினரை நாய்கள் போல் கருதினார். ஆரியர் என்று இனப் பாகுபாடு காட்டியவர் மேக்ஸ் மில்லர்.
ஆரியர் என்ற ஒன்று இல்லை என தமிழ்ச் சங்க நூல்கள் சொல்கின்றன. ஆரியர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தமிழ்நாட்டில் சில நூல்களை எழுதுகிறார்கள். நச்சு விதையை பரப்புகிறார்கள். இந்தியாவில் மேற்கத்திய நாகரிகங்களை திணிக்க முயற்சிகள் நடைபெற்றது. தமிழும், சமஸ்கிருதமும் இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் தொன்மையான சிறந்த மொழிகள்.
ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்த போது இந்தியாவில் நாகரிகங்களில் சிறந்த நாகரிகங்களாக இருந்தன. மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்து ஏராளமானவை உள்ளன. ரிக் வேதத்தில் அனைவரும் சமம் என்றும், அனைவரும் ஒரே குடும்பம் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆரியர்களை வந்தேறிகள் என்று கூறியவர் ஈ.வே.ராமசாமி.
அதனை மக்கள் மத்தியில் திணிக்க முயற்சித்தவர். ஆரியர்கள் என்பவர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள். கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள். சிந்து - சரஸ்வதி நதி நாகரிகம், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications