Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருங்களத்தூருக்கே ஹேப்பி.. ஜிஎஸ்டி ரோட்டில் விழுந்த நல்ல செய்தி.. படுஸ்பீடில் மாறப்போகிறது சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாகி வரும் நிலையில், மேலும் சில பணிகளும் உடனடியாக கையில் எடுக்க போகிறார்களாம் அதிகாரிகள்.. இதுகுறித்த தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது..

Perungalathur News and Major announcement about Rainwater drainage works on Kilambakkam Bus Terminus

ரயில்வே ஸ்டேஷன்: கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறியிருக்கின்றன.

இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.. கிளாம்பாக்கத்தில் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும், ஜிஎஸ்டி சாலையில் வெள்ளமாக தேங்கிவிடுவதால், இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பிறகே, பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

கல்வெட்டுகள்: அதேபோல, கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 4 கல்வெட்டுகளும் குறுகலாக உள்ளதுடன், சிதலமடைந்தும் காணப்படுகிறதாம். இதன்காரணமாகவும், மழைநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும், மழைநீர் தேங்கி நிற்பது தற்போது தெரியவந்து உள்ளது.

எனவே, ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்தும் பணி துரிதமாகி உள்ளது.. இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம், பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வண்டலூர் ஏரி: அதேபோல, இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் கையில் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Perungalathur News and Major announcement about Rainwater drainage works on Kilambakkam Bus Terminus

இதைத்தவிர, பஸ் ஸ்டாண்டு அருகில், சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்துவதுடன், புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளதாம்..

ஜரூர் பெண்கள்: விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பணிகளை முடிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+