பெட்ரோல் பங்குகுளில் புது ரூல்ஸ்.. முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம்
சென்னை: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகிக்கப்படும் என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை 6-ந் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகிற வாடிக்கையாளர்கள் முக கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்க முடியும் என்பதையும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், கொரோனா பரவுதல் தீவிரமான இருந்த காலங்களில் தெரிவித்திருந்தது.
தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கின்றது" இவ்வாறு கூறியுள்ளார்.