விண்ணை எட்டும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு - இன்று எவ்வளவு தெரியுமா
பெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து ரூ.88.07 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90 ஆகவும் உள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.85 ரூபாய், டீசல் லிட்டர் 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ.88.07 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90 ஆகவும் உள்ளது.
Recommended Video

சர்வதேச கட்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,375 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து, மே முதல், மீண்டும் உயரத் துவங்கியது.

இதன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்., ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கொரோனா காரணமாக உற்பத்தி குறைந்து போனதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 87.85 ரூபாய், டீசல் லிட்டர் 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ.88.07 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90 ஆகவும் உள்ளது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் சதம் அடித்து விடும் என்று வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications