நாளை மதியம் கரையை கடக்கிறது பேய்ட்டி புயல்...60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை பெய்கிறது.
Recommended Video

சென்னை: சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள பேய்ட்டி புயல் நாளை மதியம் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய பலத்த காற்று வீசும்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதற்கு பேய்ட்டி புயல் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்காக 410 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனையடுத்து, மத்திய மேற்கு வங்க கடல், தென்மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் காலை முதல் பரலாக மழை பெய்தது. காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது
பேய்ட்டி புயல்.. சென்னையில் கடலோரங்களில் மழை.. சில இடங்களில் கடல் சீற்றம்! #PethaiCyclone pic.twitter.com/tpEjVq4fsZ
— Oneindia Tamil (@thatsTamil) December 16, 2018
ஆந்திர கடற்கரையை காக்கிநாடாவிற்கும் மசூலிப்பட்டிணம் இடையே பேய்ட்டி புயல் நாளை மதியம் கரையை கடக்கிறது. இதனையொட்டி ஆந்திராவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மற்றும் போரிடர் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், புதிய புயல் உருவாகி ஆந்திராவை அச்சுறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications