சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம்
சென்னை: "சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கேஸ் பாதுகாப்பானது என்றும் முன்பதிவு செய்யவேண்டியது இல்லை என்றும் என்று நகர கியாஸ் விநியோக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் பெறுவது எப்படி என்றும் அந்தநிறுவன அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல வீடுகளுக்கு சிலிண்டர் சரியாக கிடைப்பது இல்லை. கிராமங்களில் எல்லாம் சிலிண்டர் இல்லாத நிலையில், பலர் விறகு அடுப்புக்கும், மின்சார அடுப்புக்கும் மாறி வருகிறார்கள். சென்னையில் அப்படி மாறிவிட முடியாது. இந்த சூழலில் குழாய் மூலம் கியாஸ் இணைப்பை பெற்றுக் கொள்ள முடியும். இது பூமிக்கடியில் குழாய்கள் வழியாக வீடுகளுக்கு நேரடியாக சமையல் கியாஸ் வழங்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான வசதி என்று மத்திய அரசு கூறியுள்ளது.. சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, முக்கிய நகரங்களில் உள்ள வீடுகள் 3 மாதங்களுக்குள் இந்த வசதிக்கு மாற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்பதிவு செய்ய வேண்டியதில்லை
குழாய்வழி இயற்கை கியாஸ் இணைப்பு என்பது, ஒரு குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது போல் வீட்டிற்கு நேரடியாக இயற்கை கியாஸை வழங்குவது தான். சமையலறை அடுப்புகளில் பயன்படுத்தலாம். வீட்டு சமையல் பயன்பாடுகளுக்கு ஏற்ற கட்டுப்பாடுத்தப்பட்ட அழுத்தத்துடன் வழங்கப்படுகிறது, இதன் மூலம் 24 மணி நேரமும் கியாஸ் விநியோகம் செய்யப்படுவதுடன், சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டு காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
பாதுகாப்பானது
வீடுகளுக்கு குறைந்த அழுத்தத்தில் கியாஸ் விநியோகிக்கப்படுவதால் பாதுகாப்பானது என்று கூறுகிறது மத்திய அரசு. அதேபோல், பயன்படுத்திய கியாசுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் உள்ளிட்ட பல்வேறு பயன்களும் இருந்து வருகிறது. காற்றை விட லேசானது மற்றும் கசிவு ஏற்பட்டால் விரைவாக காற்றில் பரவிவிடும். இதனால் எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. பல குடியிருப்பாளர்கள் ஒன்றாக விண்ணப்பிக்கும்போது குழாய் பதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் செய்வது குறித்து மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வசதி சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாடகைதாரர்கள், வணிக நிறுவனங்கள் (உணவகங்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள்), தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்கள். அதேநேரம் அந்தந்தப் பகுதிகளில் குழாய் கியாஸ் இணைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட குழாய் கியாஸ் இணைப்பு நிறுவனத்திற்கு பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் பதிவுக் கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்கள்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை அல்லது பிற அடையாளச் சான்று, முகவரிச் சான்று (மின்சாரக் கட்டண ரசீது, சொத்து ஆவணங்கள் அல்லது வாடகை ஒப்பந்தம் போன்றவை), பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், உரிமை அல்லது குத்தகைச் சான்று உடன், பெயர், தொடர்பு எண், முகவரி, இணைப்பின் வகை (வீட்டு உபயோகம், தொழில் அல்லது வணிகம்), விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் வழிகாட்டுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் விண்ணப்பதாரரைத் தொடர்பு கொள்வார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை எங்கு கிடைக்கிறது
இதுகுறித்து நகர கியாஸ் விநியோக நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர்.பிரசாத் கூறும் போது, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் டோரண்ட் கியாஸ் நிறுவனம் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி குழாய் பதித்து 5 ஆயிரம் பொதுமக்களுக்கு சமையல் கியாஸ் விநியோகம் செய்து வருகிறது. சென்னையில் மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், முகப்பேர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருமங்கலம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதியில் விநியோகம் செய்யப்படுகிறது.
உடனே இணைப்பு
எனவே வீடு அருகில் ஏற்கனவே இணைப்புகள் இருந்தால் உடனடியாக தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கப்படும். இணைப்பு இல்லாத பகுதிகளில் மெயின் குழாய் இருக்கும் பகுதியிலிருந்து இணைப்பு கொண்டு வரப்பட்டு வழங்கப்படும். அரசு தற்போது பல்வேறு உதவிகளைச் செய்து வருவதால் வேலை விரைவாக நடந்து வருகிறது. குழாய் வழி இருப்பு மற்றும் ஆய்வு ஒப்புதல்களைப் பொறுத்து ஏற்கனவே உட்கட்டமைப்பு உள்ள பகுதிகளில், விண்ணப்பித்த சில வாரங்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படுகிறது. மின்சாரத்தைப் போலவே, கட்டணமும் பொதுவாகப் பயன்பாட்டின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
விரைவான சேவை
மற்ற எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது, இயற்கை கியாஸ் குறைவான கார்பன் வெளியேற்றத்தையே வெளியிடுகிறது. சாலைகளை கடந்து குழாய்களை கொண்டு செல்வது, சென்னை மாநகர பகுதிகளில் பல்வேறு இடர்பாடுகளுடன் சவாலான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இணைப்பு கோரி எங்களை தொடர்புகொள்பவர்களுக்கு விரைவான சேவை அளித்து வருகிறோம்" என்று கூறினார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்














Click it and Unblock the Notifications