Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளஸ் 2 கணித தேர்வில் கடினமான கேள்விகள்.. ‘க்ரேஸ் மார்க்’ வழங்க வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிளஸ்-2 கணித தேர்வில் வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்று முடிந்த கணித பாட தேர்வில் சில கேள்விகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கணித தேர்வு

கணித தேர்வு

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. தமிழ் மொழித் தாள், ஆங்கிலம், இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில், கணித பாட மதிப்பெண் முக்கியப் பங்கு வகிக்கும். கட் ஆஃப் மதிப்பெண்ணில் 50% இடம்பிடிப்பது கணிதம் தான் என்பதால், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணித பாடத்தில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.

 சென்டம் குறையும்

சென்டம் குறையும்

கணிதம் பலருக்கு கடினமாக இருந்தாலும், அதிக சென்டம் வருவது கணித பாடத்தில் தான். இந்தநிலையில், நேற்று நடைபெற்ற கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சில வினாக்கள் கடினமாகவும், புத்தகத்திற்கு வெளியிலும் இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். கணிதத் தேர்வில் வினாக்கள் சற்று கடினமாகக் கேட்கப்பட்டதால், இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும், அதன் காரணமாக பொறியியல் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ் கருத்து

ராமதாஸ் கருத்து

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு கணிதப் பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர். கணிதப் பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல. கணிதத்தில் 100% மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு.

திறமையை காட்டுவதாக நினைத்து

திறமையை காட்டுவதாக நினைத்து

ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100% மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர் அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது. 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+