ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே ஹேப்பி நியூஸ்.. அக்கவுண்டுக்கே வந்த 2000! உங்களுக்கு வரலையா? இதை பண்ணுங்க!
சென்னை: மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா 2000 ரூபாய் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ், 20வது தவணையாக சுமார் 9.20 கோடி விவசாயிகளுக்கு ரூ.20.50 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. சில விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என கூறி வரும் நிலையில், அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்..
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 17 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு 2வது முறையாக பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 20வது தவணை நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுவித்தார். நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20வது தவணையை பிரதமர் மோடி விடுவித்தார். இதன் மூலம் சுமார் 9 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் சில விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பிஎம் கிசான் ஊக்கத்தொகையான 2000 ரூபாய் வழக்கமாக பயன்படுத்தி வரப்படும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் பலரும் அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் கூட்டுறவு வங்கி கணக்குகளில் அந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.
மேலும் கோ-ஆபரேட்டிவ் அல்லது வேறு வங்கிகளில் அக்கவுண்ட் இருந்தாலும் அதிலும் சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் அதிகாரிகள். ஆதார் எண் அடிப்படையிலேயே பணம் வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண் விவரங்களும் சரிபார்த்த பின்பு தான் பணம் வர வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒரே பெயர், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவை கொடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகள் இருந்தால் அதில் வரவு வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறனர். மேலும் பல விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கணக்குகளில் 2000 ரூபாய் பணம் வர வைக்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு பணம் வரவில்லை என விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை.
கூட்டுறவு வங்கி கணக்குகளிலும் பிற வங்கி கணக்குகளும் சரிபார்த்தால் நிச்சயம் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கும் என்கின்றனர். ஒரு வேலை அப்படி வரவில்லை என்றால் உடனடியாக https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பயனாளிகளின் தங்கள் நிலையை அறியலாம். தொடர்ந்து உங்கள் ஆதார் எண் அல்லது பிஎம் கிசான் திட்ட எண்ணை கொடுத்தால் உங்களது தரவுகளை பெற்றுக் கொள்ளலாம். அதில் விவசாயிகள் தங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபாத்துக் கொள்ள வேண்டும்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications