ஒரே மேடையில் மீண்டும் பிரதமர் மோடி - மு.க ஸ்டாலின்.. 28ம் தேதி தூத்துக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்பு
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் முதல்வர் முக ஸ்டாலினும் பங்கேற்க உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழாவுக்கு பெயர் போன குலசேகரப்பட்டினத்தில்தான் இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது.

பூகோள ரீதியாகவும் ராக்கெட் ஏவுவதற்கு உகந்த இடமாக குலசை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதி காற்றின் வேகம் அதிகம் இல்லாத இடமாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும் இருக்க வேண்டும். புயல், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படாத பகுதியாகவும் இருக்க வேண்டும்.
அந்த வகையில், நிலையான கால நிலை கொண்ட குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே உள்ளதால், இந்த பகுதியில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். இதனால் எரிபொருள் செலவும் மிச்சமாகும். தற்போது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள மாதவன் குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா, தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். கேலா இந்தியா துவக்க விழாவில் பிரதமர் மோடியும் முதல்வர் முக ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடலோர பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications