எப்போதும் தமிழகத்தின் முன்னேற்றம் பற்றியே பேசுவார்.. வசந்த குமார் மறைவு.. பிரதமர் மோடி உருக்கம்!
சென்னை: எம்பி வசந்த குமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக அரசியல் மற்றும் வியாபார உலகில் தனக்கு என்று தனி சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு வயது 70.

சென்னையில் சிகிச்சை பலனின்றி கொரோனாவிற்கு மரணம் அடைந்தார். ஆகஸ்ட் 10 முதல் கொரோனா காரணமாக வசந்த குமார் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் எம்பி வசந்த குமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.எம்பி வசந்த குமார் மறைவு வருத்தம் அளிக்கிறது. வியாபார உலகில் மற்றும் சமூக சேவையில் இவர் ஆற்றிய பங்கு கவனிக்கத்தக்கது.

என்னிடம் பேசும் போதெல்லாம் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து எப்போதும் பேசுபவர் வசந்த குமார். அவரின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கல்கள். ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications