மயக்கும் மாமல்லபுரம்.. இதமான வெயிலுக்கு.. இளநீர் குடிங்க.. உபசரித்த மோடி. நெகிழ்ந்த ஜின்பிங்!
Recommended Video
சென்னை: மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமர்ந்து இளநீர் குடித்தார்.
இரண்டு நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார்.பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் இருந்து கார் மூலம் அவர் மகாபலிபுரம் சென்றார்.

இன்றில் இருந்து நாளை மறுநாள் வரை மகாபலிபுரத்தில் நடக்கும் மாநாட்டில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த் நிலையில் முதற்கட்டமாக மாமல்லபுரத்தை மோடி ஜின்பி ங்கிற்கு சுற்றிக் காட்டினார். அதில் மகாபலிபுரம் சிற்பங்கள் குறித்து பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் விளக்கினார்.
அர்ஜுனன் தபசு பகுதியை இருவரும் சுற்றிப்பார்த்தனர். அந்த பகுதியின் வரலாற்றை பிரதமர் மோடி ஜின்பிங்கிடம் விவரித்தார். அதேபோல் வெண்ணை உருண்டை பாறை குறித்தும் மோடி விளக்கினார். சுமார் 15 நிமிடங்கள் இவர்கள் சுற்றிபார்த்தனர்.

இந்த சிற்பங்களை சுற்றி பார்த்தப் பிறகு இளநீர் அருந்தியவாறு பேச்சுவார்த்தை இரண்டு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சென்னையின் மாலை நேர இதமான வானிலையில், மரத்தின் அடியில், அமைதியாக உட்கார்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
20 நிமிடமாக இவர்கள் இருவரும் அங்கிருந்து பேசிக்கொண்டு இருந்தனர். மோடி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் சீன அதிபரிடம் பேசினார்.












Click it and Unblock the Notifications