நாமெல்லாம் நிம்மதியா வாழ நரேந்திர மோடிஜிதான் காரணம்.. நெகிழ்ந்து உருகி சிலாகித்த எடப்பாடி!
பிரதமர் மோடி இருப்பதால்தான் நாட்டில் மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடி இருப்பதால்தான் நாட்டில் மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சென்னையில் பாஜக சார்பாக பெரிய பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருக்கிறார். அதேபோல் இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் பிரதமர் மோடியை பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சுமார் 20 நிமிடம் இவர் பேசினார்.

மோடி தகுதி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சில், இந்தியாவை ஆளும் ஒரே தகுதி கொண்டவர் பிரதமர் மோடிதான். 130 கோடி பேரில் மோடி மட்டுமே பிரதமர் ஆக தகுதி கொண்டவர். எங்கு தேடினாலும் தகுதியான ஒரு பிரதமர் வேட்பாளர் கிடைக்கவில்லை. மோடியால்தான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்

மக்கள் சந்தோசம்
மக்கள் சந்தோசமாக வாழ மோடிதான் காரணம். அண்டை நாடு நம்மை தாக்குகிறது. அண்டை நாடு தினமும் நம்மை தொடர்ந்து அச்சுறுத்துகிறது. புல்வாமாவில் தீவிரவாதிகள் மோசமாக தாக்கினார்கள்.

புல்வாமா தாக்குதல்
மக்கள் எல்லோரும் புல்வாமா தாக்குதலால் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் மோடி உடனடியாக செயல்பட்டு தீவிரவாத முகாம்களை அழித்தார். விமானி அபிநந்தனை வேகமாக மீட்டவர் நம் மோடி. இதன் மூலம் பிரதமர் மோடி வரலாறு படைத்துள்ளார்.

தமிழகம் முன்னேற்றம்
தமிழகம் வேகமாக முன்னேறி இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களை நமது அரசு வேகமாக செய்துள்ளது. பாஜக ஆட்சியில் விலைவாசி குறைந்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை பாஜக தமிழகத்தில் தொடங்கி உள்ளது. விவசாயிகளுக்காக மோடி அரசு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

கோதாவரி நதிகள்
கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். பிரதமர் சிறுகுறு விவசாயிகளுக்கு நலம் பெற நிறைய திட்டம் கொண்டு வந்துள்ளனர். கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டனர், இப்போது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத மாதம் பணம் அளிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அக்கா போன்றவர்.

மக்கள்
ஏழை மக்களுக்கு ரூ.2000 கொடுப்பது தவறா?.ஒரு ஏழை விவசாயிக்கு பணம் கொடுப்பது தவறா?. ஸ்டாலின் எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறார். எங்கள் கூட்டணியை மக்கள் விரோத கூட்டணி என்கிறார். எங்கள் கூட்டணியில் பலர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

நான் விவசாயி
நான் விவசாயி: மோடி விவசாயி: ராமதாஸ் விவசாயி. நம்முடைய கூட்டணி மெகா கூட்டணி, இயற்கையான கூட்டணி, அதனால்தான் ஸ்டாலின் எங்களை பார்த்து பயப்படுகிறார். இப்போது எங்கள் கூட்டணிக்கு 40 எம்.பி பலம் இருக்கிறது. அதிமுக 39, பாமக 1, பாஜக 1 என்று பெரிய பலம் கொண்டவர்கள் நாம், என்று முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications