குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுத்த பிரதமர்.. அதிர்ந்த அதிகாரிகள்.. கோவளம் பீச்சா இது.. ரொம்ப கேவலம்!
கோவளம் பீச்சில் தூய்மை பணியினை பிரதமர் மோடி மேற்கொண்டார்
Recommended Video
சென்னை: கையில் குவார்ட்டர் பாட்டிலை, மோடி கையில் எடுத்ததுமே கோவளம் பீச்சில் இருந்த அதிகாரிகளுக்கு அள்ளு கிளம்பிவிட்டது!
நம்ம இடத்தை நாம தான் சுத்தமா வெச்சிக்கணும் என்பது இயல்பான, அவசியமான விஷயம். ஆனால் இதற்குகூட மத்திய அரசு தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்ததே மக்களுக்கு ஒருவகையில் அசிங்கம்தான். ஆனால், அதையும் கடைப்பிடிக்காதது அதைவிட அசிங்கமாக உள்ளது.
அப்படித்தான் இன்றைக்கு கோவளம் பீச்சில் அசிங்கப்பட்டு நிற்கிறோம். கோவளத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளதால், இங்குள்ள பீச்சில் இன்று காலை வாக்கிங் சென்றார்.

லட்சணம்
பீச் தானே.. எப்படியும் சுத்தமான மணலில் காலாற நடக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும். அதனால்தான் கையில் கிளவுஸ், காலில் செருப்புகூட இல்லாமல் நம்பி காலை வைத்திருக்கிறார். ஆனால், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தபோதுதான், நம்ம ஆட்கள் செய்து வைத்த லட்சணம் அங்கே தெரிந்தது. மணல் முழுக்க பரவி கிடந்த குப்பைகளை அள்ள ஆரம்பித்தார். முக்கால்பாகம் பிளாஸ்டிக் குப்பைகள்தான்.. அங்கங்கே மது பாட்டில்களும் விழுந்து கிடந்தன.

குவார்ட்டர் பாட்டில்
நம் ஆட்கள் பீச்சில் கும்மாளமிடுவது, அங்கேயே உட்கார்ந்து குடித்துவிட்டு, குப்பைகளையும் போட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல் சென்றிருப்பதுதான், காலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த பாட்டிலையும் பிரதமர் கையிலேயே எடுத்து கவருக்குள் போடுகிறார். கையில் குவார்ட்டர் பாட்டிலை கூச்சமே இல்லாமல் ஒரு பிரதமர் எடுப்பதை பார்த்துமே அங்கிருந்த அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. இதற்கு என்ன பதிலும் சொல்ல முடியாமல் விழித்து கொண்டு அதிர்ந்து நின்றனர்.

ஐநாவில் முழக்கம்
ஆனால், பிரதமர் எதையுமே முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பது மோடியின் முக்கிய பிரச்சாரங்களில் ஒன்று. அது மட்டுமில்லை.. இந்த பிரச்சாரத்தை ஐநா பொதுக்குழு கூட்டத்திலும் மோடி முன் வைத்திருந்தார்.
|
மதிப்பீடுகள்
ஆனால் காலையில் 30 நிமிடத்துக்கு இந்த பிளாஸ்டிக்கை அள்ளியபோது நம்மை பற்றி என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை. குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுக்கும்போதும் நம் மீதான மதிப்பீடுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தாலே மகா வெட்கமாகவும், கேவலமாகவும் இருக்கிறது.

முன்வருவார்களா?
இனியாவது கடற்கரையை நம் குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்தாமல் தடுப்பார்களா? கொஞ்சமாவது தூய்மையை கடைப்பிடிக்க முன்வருவார்களா? பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க மக்கள் மனசார நினைப்பார்களா?
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications