Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம்.. PM-YASASVI மூலம் மத்திய அரசு சூப்பர் சான்ஸ்! பலன்களை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதர பிற்படுத்தப்பட்டோர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் ('யசஸ்வி') மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. நடப்பாண்டில், இத்திட்டத்தின் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிகிறது.

பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன.. இதனால் ஏராளமான மாணவ, மாணவிகள் பெரும்பலனை அடைந்து வருகிறார்கள்.

PM yasasvi scholarship School students

இளம் சாதனையாளர்கள்

அந்தவகையில், மத்திய அரசின் பிரதமர் இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை (PM YASASVI) திட்டம், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் பிரிவு மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குகிறது.

இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை திட்டம் என்பது, பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட அருமையான திட்டமாகும்.

Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்பதன் சுருக்கம்தான் PM YASASVI Scholarship ஆகும். இந்த திட்டத்தின் மூலம், 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய கல்வி உதவித்தொகை

அந்தவகையில், 2025-2026ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (https://scholarships.gov.in) (National Scholarship Portal) Renewal Application Groom இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025-26ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, விண்ணப்பம் செய்வதற்கு இன்றுதான் அதாவது செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான இன்று செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.. பள்ளிகள் விண்ணப்பங்களைச் சரிபார்க்க கடைசி நாள், வரும் அக்டோபர் 15ம் தேதியாகும்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

2025-26ம் கல்வியாண்டில், மத்திய அரசின் பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பயிலும் தமிழக மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

பிஎம் கல்வி உதவித்தொகை

புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, 11ம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம். National Scholarship Portal (NSP) என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, உங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும். இப்போது ஒரு முறை பதிவு எண் (OTR Number) மற்றும் பாஸ்வேர்டு உங்களது செல்போனுக்கு வரும்,

இந்த ஓடிஆர் நம்பரை பயன்படுத்தி நடப்பு கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதிதாக (Fresh Application) விண்ணப்பித்து கொள்ளலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.. மேலும் இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்திட (National Scholarship Portal) (https://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+