அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு வரை பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாமே??
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக உள்ளிட்ட கட்சிகள் தயாராகின்றன
சென்னை: அதிமுக கூட்டணிக்கு தயாராகிவிட்டது. அது சம்பந்தமாக ஓரளவு தகவல்களும் கசிய ஆரம்பித்து விட்டன.
அதாவது ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகம் வரபோகிறார். ஜனவரியில் தாங்கள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என்று தமிழிசை சவுந்தராஜனும் சொல்லிவிட்டார்.
ஆனாலும் ஒருகட்ட அதிமுக - பாஜக கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. பாஜகவுடன், அதிமுக கூட்டணியில், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் இணைய உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜகவை ஏற்குமா?
ஆனால் நாள்தோறும் அறிக்கை, ட்விட்டர் என்று ஒன்றுவிடாமல் பாஜகவை திட்டிகொண்டிருக்கும் பாமக, எப்படி பாஜகவை ஏற்க போகிறதோ என்ற சந்தேகமும் இந்தகூட்டணியை பற்றி கேள்விப்பட்டவுடன் எழுந்து செல்கிறது.

15 தொகுதிகள்
அதிமுகவுக்கு 25 சீட் என்பது இப்போதைய நிலை. மீதமிருப்பது 15 தொகுதிகள்தான். இந்த 15 தொகுதிக்குதான் இப்போது போட்டியே என்று கூறப்படுகிறது. 15-ல் தங்களுக்குத்தான் அதிகம் வேண்டும் என்று ஒரு பக்கம் பாமகவும், மற்றொரு பக்கம் பாஜகவும் கேட்பதாகவும், இதில் கொஞ்சம் அதிகமாக முரண்டு பிடிப்பது பாமகதான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

பாமக? பாஜக?
அதனால் பாஜகவை பார்ப்பதா? பாமகவை பார்ப்பதா என்று அதிமுகவும் குழம்பி உள்ளது. ஆனால் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு சீட்தான் தர முடியும். அதைவிட கொஞ்சம் அதிகம் என்றால் தேமுதிகவுக்கு தரலாம். அதுவும் 5-க்குள்தான் ஒதுக்க முடியும். அதற்குமேல் தருவதற்கு கட்சியின் வளர்ச்சி மங்கிப்போய் காணப்படுகிறது.

விரைவில் வெளியாகும்
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேமுதிகவை சேர்த்து கொள்ளாத நிலையில், கொடுப்பதை வாங்கி கொள்ளும் நிலையில்தான் அந்த கட்சி உள்ளது. எனவே பாஜக, பாமக கட்சிகளில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டால், சீட் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மக்கள் கோபம்
புதிய தமிழகம், தேமுதிகவும் பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தாததால், பெரிய அளவில் வெற்றி கிடைக்காது. பாஜகவின் நிலையும் இப்போது அப்படித்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆர்.கே.நகருக்கு பிறகுதான் பாஜக மீது மக்கள் கோபம் அதிகரித்துள்ளது. அதனால் பாஜகவும் பெரிய வெற்றியை தந்துவிடாது. அதனால் அதிமுக அதிகமாக நம்பி இருப்பது பாமகவைதான்.

பெரும்பான்மை வருமா?
ஏனெனில் தினகரனால் பிரிந்த வாக்குகளை பாமகதான் சேர்க்கும் என்று அதிமுக நம்பி கொண்டிருக்கிறது. எப்படி பார்த்தாலும், பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் அதிமுக பெரும்பான்மையை பிடிக்க முடியாது என்றே அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications