குப்பைக்கு போன வரலாறு.. திண்டுக்கல்லை பாமகவிடம் தூக்கி கொடுத்த அதிமுக.. அதிர்ச்சியில் தொண்டர்கள்
Recommended Video

சென்னை: பெரும்பாலும் யாருக்குமே தராத திண்டுக்கல் தொகுதியை அதிமுக பாமகவுக்கு ஒதுக்கியுள்ளதும், முதல்முறையாக திண்டுக்கல்லில் பாமக களம் இறங்குவதும் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது!
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதன்முதலில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றது இந்த திண்டுக்கல் தொகுதியில். அப்போது முதல் இந்த தொகுதி அதிமுகவின் சென்ட்டிமென்ட்.. அதிமுகவின் கோட்டை!
திமுக, காங்கிரஸ், தமாகா போன்ற கட்சிகள் இங்கு ஜெயித்து வந்தாலும், முகவரி தந்த தொகுதி என்பதால் அதிமுக இந்த தொகுதியை பெரும்பாலும் யாருக்குமே விட்டுக் கொடுக்காது! ஜெயலலிதா இருந்தவரை இதை இப்படித்தான் வைத்திருந்தார்.

ஜோதிமுத்து
ஆனால் இந்த முறை பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், இன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்தான். இவர்கள் இருவருமே தங்கள் உறவுகளுக்கு சீட் கேட்டு தலைமையை நச்சரித்து வந்தார்கள். இவர்கள் இரண்டு பேரை சமாளிக்க முடியாமலும், கோஷ்டி பூசலை தவிர்க்கவும்தான் பாமகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதனால் ஜோதிமுத்து என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பின்னடைவு
இப்போது சிக்கல் என்னவென்றால், வடமாவட்டங்களில் வலுவான பாமகவுக்கு ஒரு சில தொகுதிகளை தவிர தென் மாவட்டங்களில் பலம் கிடையாது. செல்வாக்கே இல்லாத திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது பாமகவுக்கு மட்டுமல்லாது, அதிமுகவுக்கே பின்னடைவு ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

அறிமுகக்கூட்டம்
அதிமுக நேரடியாக திண்டுக்கல்லில் களம் இறங்காததால் திமுக தெம்பாக உள்ளது. வேலுச்சாமி என்பவரை இக்கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் திமுக வேலுச்சாமியாகட்டும், பாமக ஜோதிமுத்து ஆகட்டும், இந்த இருவருமே பிரபலம் இல்லாத நபர்கள். இருவரும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விவசாயிகள். அதனால் அறிமுகக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதை அக்கட்சியின் பரிதாபம் என்றே கருதப்படுகிறது.

ஐ. பெரியசாமி
அதிமுகவின் வலுவான தொகுதியான திண்டுக்கல்லை எப்படியாவது இந்த முறை பிடித்துவிட வேண்டும் என்று திமுக திட்டமிட்டு வருகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது. அதேபோல, பாமக வேட்பாளரை வெற்றி பெற வைத்து, தங்களுடைய கோட்டையை தக்க வைத்து கொள்ள அதிமுகவும் பெரிய அளவில் களப்பணி ஆற்றும் என தெரிகிறது. ஆக மொத்தம், அதிமுக எளிதாக ஜெயிக்க வேண்டிய தொகுதி இன்றைக்கு சிக்கலாகி விட்டதாக கூறப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications