ராமதாஸ் தூக்கி போட்ட திடீர் குண்டு.. "மக்களா சட்டமா"?.. வெடித்து கிளம்பிய கமெண்ட்டுகள்!
இடஒதுக்கீடு குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: திடீரென சட்டத்தை பற்றி பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.. யாருடைய சட்டம் பற்றி என்று தெரியவில்லை. எந்த சட்டம் என்றும் புரியவில்லை. "மக்களுக்காகத் தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல... அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன" என்று நறுக்கென ஒரு டிவீட் போட்டுள்ளார். வழக்கம் போல மொட்டையாகத்தான் இருக்கிறது.
பலமுறை திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தாலும் எந்த சட்டத்தைப் பற்றி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் எதையோ மனதில் வைத்துதான் இதை சொல்கிறார் என்று தெரிகிறது. அதைத்தான் கமெண்ட் போடுகிறவர்களும் விதம் விதமாக கேள்வி கேட்டும், கமெண்ட் போட்டும் இந்த விவாதத்தை கலகலப்பாக்கியுள்ளனர்.

ஆனால் டாக்டர் ராமதாஸ் குறிப்பிடுவது இட ஒதுக்கீடு குறித்துதான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக புரிகிறது. அதாவது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைத்தான் அவர் மறைமுகமாக இப்படி குறிப்பிட்டுள்ளார். அவர் மக்கள் என்று கூறியிருப்பது நிச்சயம் வன்னியர்களை மட்டும்தான் என்றும் புரிகிறது. வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டைத்தான் இப்படி போட்டுள்ளார் ராமதாஸ் என்று சொல்கிறார்கள்.
அதிமுகவுடன் கூட்டணியில் நீடிக்க இதை ஒரு நிபந்தனையாகவே பாமக வைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை கொடுத்தால் பின்னாடியே மற்ற ஜாதியினரும் கிளம்பி விடுவார்கள். முக்குலத்தோர் ஜாதியினர் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஏற்கனவே கருணாஸ் முண்டா தட்டி காத்து கொண்டிருக்கிறார்.. முக்குலத்தோர் மட்டுமல்லாமல் மற்ற ஜாதியினரும் கண்டிப்பாக கேட்பார்கள்.

இதை எதிர்பார்த்துத்தான் முதல்வர் எடப்பாடியார் இந்த விஷயத்தில் படு நிதானமாகவும், பக்குவமாகவும் செயல்படுகிறார். அவசரப்படாமல் ராமதாஸுடன் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் இதில் காட்டும் நிதானமும், கவனமும் எந்த ஜாதியையும் தான் பகைத்து கொள்ளவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது. ஆனால் ராமதாஸோ விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறார்...!












Click it and Unblock the Notifications