ஏட்டுச் சுரைக்காய் கல்விமுறை வேண்டாம்... ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை: மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாக பள்ளிகள் கையாளக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சுமையற்ற சுகமான கல்விமுறையே தேவை என்றும், இதை உணர்ந்து மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சுமையற்ற கல்வி
பள்ளி மாணவர்களுக்கு சுமையற்ற சுகமான கல்வி முறை வேண்டும் என்பதை தான் பொதுவாழ்வுக்கு வந்த 40 ஆண்டுகளாக தாம் வலியுறுத்தி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பள்ளி வளாகங்கள் கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதியாக திகழவேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ.
சி.பி.எஸ்.இ. ஆளுகைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என அந்த அமைப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் அதேவேலையில் கல்விமுறையை சுமையற்றதாக மாற்றாமல் வெறும் அணுகுமுறைகள் மட்டும் பயன் தராது என்றும் தெரிவித்துளார்.

புத்தக எடை
பள்ளி செல்லும் மாணவர்களின் எடையை விட அவர்கள் தூக்கிச் செல்லும் புத்தகங்களின் எடை பன்மடங்கு கூடுதலாக இருப்பதாகவும், எல்.கே.ஜி.க்கு சேர்க்க முன் இரவில் இருந்து வரிசையில் நின்று விண்ணப்பம் வாங்குவதில் தான் கல்விச்சீரழிவு தொடங்குவதாகவும் வேதனை தெரிவித்திருக்கிறார்.

ஓட்டம்
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தான் அறிவாளிகள் என்ற தவறான சிந்தனை விதைக்கப்பட்டுள்ளதாகவும், பின்லாந்து நாட்டை போல் வீட்டுப்பாடம் இல்லாத, சிந்திக்கும் திறனை வளர்க்கும் முறையில் கல்விமுறையை கொண்டுவர வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications