மகனையும், மருமகளையும் இப்படி விமர்சிப்பார்களா? ராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய்.. அன்புமணி பதிலடி!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய் என்று அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார். தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் உள்ளதாக கூறிய அன்புமணி, பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொதுவெளியில் இப்படி விமர்சிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வந்த கருத்துகளுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க காரணம் அன்புமணி தான் என்றும், செளமியா தனது பேச்சை மீறி அரசியலுக்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார்.

பாமக ஆலோசனை கூட்டம்
அதுமட்டுமல்லாமல் அன்புமணி ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், புதிய நிர்வாகிகளை நியமித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதேபோல் பாமகவின் சீனியர் நிர்வாகிகளான ஜிகே மணி, பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் ராமதாஸ் பக்கமே நிற்கிறார்கள். இந்த நிலையில் பாமக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.
மகளுடன் வந்த அன்புமணி
இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி, தனது மகள் சங்கமித்ராவுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சரி என்று சொல்லியதால் தான் தைலாபுரம் தோட்டத்திற்கு பாஜகவினர் வந்தனர். அதன்பின் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. தற்போது இல்லை என்று மறுக்கிறார்.
ராமதாஸ் பொய்கள்
ராமதாஸ் கூறுவது அத்தனையும் பொய். பாமகவில் முழு அதிகாரம் எனக்கு தான். பாமக சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால் அதிகாரமிக்கவர் நிறுவனர் என்ற சட்டவிதி கிடையாது. பாமகவில் கொள்ளையடிப்பவனுக்கும், கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பதவி வழங்குகிறார்.
அதிகாரம் யாருக்கு?
பாமகவில் பயிர் எது? களை எது? என்று இப்போதுதான் தெரிகிறது. பொதுக்குழுவை கூட்ட, கட்சியை நடத்த தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 2 மாதங்களாக பாமகவில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டன. நான் பேசாமல் இருப்பதால், ராமதாஸ் கூறும் கருத்துகள் மட்டுமே மேலோங்குவது போல் உள்ளது.
மருமகளை யாராவது விமர்சிப்பார்களா?
தெளிவுக்காக காத்திருந்தேன். உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும். எனது மனைவி பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். தினமும், நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் உள்ளேன். பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொது வெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாஸாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
‘அய்யா பாமக’.. ராமதாஸ் அணியின் புதிய கட்சி! தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்.. தலைவர் யாரு பாருங்க? -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications