Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகனையும், மருமகளையும் இப்படி விமர்சிப்பார்களா? ராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய்.. அன்புமணி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய் என்று அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார். தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் உள்ளதாக கூறிய அன்புமணி, பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொதுவெளியில் இப்படி விமர்சிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வந்த கருத்துகளுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க காரணம் அன்புமணி தான் என்றும், செளமியா தனது பேச்சை மீறி அரசியலுக்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார்.

PMK Rift Anbumani Slams Ramadoss All His Claims Are Lies

பாமக ஆலோசனை கூட்டம்

அதுமட்டுமல்லாமல் அன்புமணி ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், புதிய நிர்வாகிகளை நியமித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதேபோல் பாமகவின் சீனியர் நிர்வாகிகளான ஜிகே மணி, பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் ராமதாஸ் பக்கமே நிற்கிறார்கள். இந்த நிலையில் பாமக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.

மகளுடன் வந்த அன்புமணி

இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி, தனது மகள் சங்கமித்ராவுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சரி என்று சொல்லியதால் தான் தைலாபுரம் தோட்டத்திற்கு பாஜகவினர் வந்தனர். அதன்பின் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. தற்போது இல்லை என்று மறுக்கிறார்.

ராமதாஸ் பொய்கள்

ராமதாஸ் கூறுவது அத்தனையும் பொய். பாமகவில் முழு அதிகாரம் எனக்கு தான். பாமக சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால் அதிகாரமிக்கவர் நிறுவனர் என்ற சட்டவிதி கிடையாது. பாமகவில் கொள்ளையடிப்பவனுக்கும், கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பதவி வழங்குகிறார்.

அதிகாரம் யாருக்கு?

பாமகவில் பயிர் எது? களை எது? என்று இப்போதுதான் தெரிகிறது. பொதுக்குழுவை கூட்ட, கட்சியை நடத்த தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 2 மாதங்களாக பாமகவில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டன. நான் பேசாமல் இருப்பதால், ராமதாஸ் கூறும் கருத்துகள் மட்டுமே மேலோங்குவது போல் உள்ளது.

மருமகளை யாராவது விமர்சிப்பார்களா?

தெளிவுக்காக காத்திருந்தேன். உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும். எனது மனைவி பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். தினமும், நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் உள்ளேன். பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொது வெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாஸாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+