கலகலக்கும் பாமக.. அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்.. அமமுகவில் வந்து குவிகின்றனர்!
பாமக கொங்கு மாதவன் அமமுகவில் தன்னை இணைத்து கொண்டார்
Recommended Video
சென்னை: தினகரன் ஒரு தீர்க்கமான முடிவில்தான் இருக்கிறார் போலும்.. அடுத்தடுத்து அவரது மூவ்களை கண்டு ஆட்டம் கண்டுவருகிறது அரசியல் களம்.. குறிப்பாக பாமக!
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே ஏகப்பட்ட அதிருப்திகள் பாமகவுக்குள் நிலவி வருகிறது. ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் போன்றோர் பாமகவிலிருந்து விலகினார்கள்.
அப்போது இவர்கள் சொன்ன காரணம், "அது எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்? அன்புமணிக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறார்கள், காடுவெட்டி குரு குடும்பத்தை புறக்கணிக்கிறார்கள்" என்றெல்லாம் ஒவ்வொரு குற்றச்சாட்டாக சொல்லி வெளியேறினார்கள்.

வலுவான கட்சி
கட்சியை விட்டு வெளியே வந்ததுடன், ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் அமமுகவிலும் இணைந்தனர். அப்போதே தினகரனின் இந்த அதிரடி மூவ் பெரிதாக பேசப்பட்டது. காரணம், தென் தமிழகம் குறிப்பாக மதுரை மண்டலத்தில் உள்ள தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அமமுகவை தினகரன் வலுவான ஒன்றாக வளர்த்து வைத்துள்ளார்.

தினகரன் கட்சி
ஆனால் வட மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வேரூன்றவில்லை. இதனால்தான் பாமகவின் முக்கிய தலைவர்களை அமமுக குறி வைத்து அதன்படியே சாதித்து காட்டியது. இந்நிலையில் மேலும் ஒரு மாநிலத் துணைத் தலைவர், இரு மாவட்டச் செயலாளர்கள் பாமகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இணைந்துள்ளனர்.

சூலூர் பிரச்சாரம்
மாநில துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இரா.கணேஷ், கொங்கு கிஷோர் ஆகியோர் கட்சி தாவி உள்ளனர். நேற்று சூலூரில் பிரச்சாரத்துக்கு தினகரன் வந்தபோது, அவரை சந்தித்து இவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

கட்சியின் சீனியர்
இதில் காங்கயம் மாதவன் கட்சி தாவியதுதான் கொஞ்சம் ஷாக்கான விஷயம். ஏனென்றால், இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். ரொம்ப காலமாகவே அதாவது, 1989 முதல் பாமகவில் நிறைய பொறுப்புகளை வகித்து வந்தவர். 30 வருஷமாக கட்சியில் இருந்தவர் இப்படி திடீரென இந்த சமயத்தில் அங்கிருந்து விலகியது எதிர்பாராத ஒன்றுதான்.

சமூக நீதி
"பாமகவும் ராமதாஸும், அன்புமணியும் சமூக நீதி என்ற பெயரில் எங்களைப் போன்ற தலித் சமுதாய மக்களை ஏமாற்றியும், மற்ற சமுதாய மக்களைப் பிரித்து சாதி மோதலை உருவாக்கியும் வந்து இருப்பதை இப்போது தான் நாங்கள் அதை உணருகிறோம். அதனால்தான் விலகுகிறோம்" என்று விலகலுக்கு மாதவன் காரணம் சொல்லுகிறார்.

கட்சி தாவல்
இன்னும் மே 23ம் தேதிக்குப் பிறகு தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மிகப் பெரிய அளவில் கட்சி தாவல்கள் இருக்கும் என்று இப்போதே பரபரப்பாக பேசப்படுகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications