அன்புமணிக்கு புரோமோஷன்? மே 28-ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு! என்ன பின்னணி?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
இந்த பொதுக்குழுவில் அன்புமணி ராமதாசுக்கு கட்சிப் பதவியில் புரோமோஷன் வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பாமக தலைவராக பொறுப்பேற்று வெள்ளிவிழா காணும் ஜி.கே.மணிக்கு பாராட்டுத் தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாமக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
பாமக நிச்சயம் ஆட்சிக்கு வரும்.! ’பாட்டாளி மாடல்’ அர்த்தம் என்ன தெரியுமா? ரகசியத்தை சொன்ன அன்புமணி!
மே 28-ஆம் தேதி
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28.05.2022-ஆம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் நடைபெறும். பாட்டாளி
மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு
பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார்.
யார் யார் பங்கேற்பு?
பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்
நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பாமக பொதுக்குழு
சார்பு அமைப்புகளான வ.ச., ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத்
தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும்
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு
முறை மட்டுமே பொதுக்குழுவை கூட்டும் நிலையில் பாமக ஆண்டுக்கு மூன்று
முறையாவது பொதுக்குழு கூட்டத்தை நடத்தி விடுகிறது.
அன்புமணி ராமதாஸ்
இந்த பொதுக்குழுவில் அன்புமணி ராமதாசுக்கு கட்சிப் பதவியில் புரோமோஷன்வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்
பாமக தலைவராக பொறுப்பேற்று வெள்ளிவிழா காணும் ஜி.கே.மணிக்கு பாராட்டுத்
தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.