கூட்டணி தர்மத்துக்காகவே குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பு- டாக்டர் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூட்டணி தர்மத்துக்காகவே மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் பாமக வாக்களித்ததாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:

ஈழத் தமிழருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. ஆனால் கூட்டணி தர்மத்துக்காவே ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.
குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது என்பது ஈழத் தமிழருக்கு எதிரான வாக்குகள் என்பதாக ஆகாது. மத்திய அமைச்சர் பதவி அன்புமணி ராமதாஸுக்கு கொடுக்கப்பட்டால் பாமக அதனை ஏற்காது.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications