சிலிண்டருக்கு குட்பாய்.. குழாய் மூலம் காஸ் இணைப்பு சென்னையில் யாரெல்லாம் பெற முடியும்?
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது.. சென்னையில் பல வீடுகளுக்கு சிலிண்டர் சரியாக கிடைப்பது இல்லை.. சிலிண்டர் இல்லாத நிலையில், பலர் விறகு அடுப்புக்கும், மின்சார அடுப்புக்கும் மாறுகிறார்கள்.. இந்நிலையில் சென்னையில் மட்டும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெறும் வசதி உள்ளது. குழாய் மூலம் எரிவாயு இணைப்பு சென்னையில் யாரெல்லாம் பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக சிலிண்டருக்கு பெரிய அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்றால், அரபு கடல் பகுதிகளில் இந்தியாவின் 22 கப்பல்கள் இந்தியாவிற்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் ஓரளவு நிலைமை சரியாகும். பொதுவாக கட்டுப்பாட்டான காலங்களில் தேவையை இரண்டு மடங்கு பயன்பாடு அதிகமாக இருக்கும்.. ஏஎம்களில் நாளை முதல் பணம் இருக்காது என்று அறிவித்தால், மொத்தமாக பணத்த அள்ளி செல்வார்கள்.

தேவையைவிட மக்கள் பீதியில் அள்ளி செல்வார்கள். அதுதான் நடக்கும்.. அப்படித்தான் இப்போது சிலிண்டர் தட்டுப்பாடு சமயத்திலும் நடக்கிறது. அதாவது தேவையை விட அதிகப்படியான சிலிண்டர் மக்கள் வாங்குவார்கள். பதுக்கல் சந்தையை ஒழிக்க அரசு இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும்.. அப்போது தான் பிரச்சனை சரியாகும். அதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பது சரியாக தெரியவில்லை.. இந்த சூழலில் சென்னையில் மட்டும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெறும் வசதி உள்ளது. குழாய் மூலம் எரிவாயு இணைப்பு சென்னையில் யாரெல்லாம் பெற முடியும் என்பதை பார்க்க முடியும்.
சென்னையில் குழாய் மூலம் எரிவாயு (PNG - Piped Natural Gas) வழங்கும் திட்டத்தை அதானி கேஸ் மற்றும் டொரண்ட் கேஸ் போன்ற நிறுவனங்கள் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வாரியத்தின் அனுமதியுடன் செயல்படுத்தி வருகின்றன. சென்னையில் யாரெல்லாம் இந்த இணைப்பைப் பெற முடியும் என்பதற்கான தகுதிகள் மற்றும் விவரங்களை பார்ப்போம்.
சென்னையில் அனைத்து இடங்களுக்கும் இன்னும் குழாய்கள் பதிக்கப்படவில்லை. தற்போது முதற்கட்டமாக பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.. வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் மணலி, மாதவரம், பெரம்பூர், ராயபுரம், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் விண்ணப்பிக்கலாம். தென் சென்னையில் ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர், சோழிங்கநல்லூர், சிறுசேரி மற்றும் தாம்பரம் சுற்றியுள்ள சில பகுதிகளில் ஒப்படைக்கலாம்.
மேற்கு சென்னையில் ஆம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி போன்ற பகுதிகளில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. உங்கள் வீட்டின் தெருவில் மஞ்சள் நிறத்தில் 'PNG' என்று எழுதப்பட்ட குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் உடனடியாக விண்ணப்பிக்க தகுதியானவர் என்று அர்த்தம்.
யார் விண்ணப்பிக்கலாம்
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை குடியிருப்போர் நலச் சங்கம் மூலம் மொத்தமாக விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும். வாடகைக்கு இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம், ஆனால் வீட்டின் உரிமையாளரிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் ஆகும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒன்று, முகவரிச் சான்றை பொறுத்தவரை மின்சாரக் கட்டண ரசீது , சொத்து வரி ரசீது அல்லது குடும்ப அட்டை அல்லது வீட்டின் பத்திரம் அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தத்துடன் வீட்டு உரிமையாளரிடம் தடையின்மை சான்றிதழ்
கட்டண விவரங்கள்
பதிவு கட்டணம் : சுமார் ரூ.300 முதல் ரூ.500 வரை (நிறுவனத்தைப் பொறுத்து மாறும்). வைப்புத் தொகை சுமார் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை வசூலிக்கப்படும். சில நேரங்களில் தவணை முறையிலும் செலுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
இணையதளம் வழியாக: அதானி கேஸ் அல்லது டொரண்ட் கேஸ் இணையதளத்திற்குச் சென்று 'New Connection' பகுதியில் உங்கள் ஏரியா பின் கோடை (Pincode) உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம். அதேபோல் உங்கள் பகுதிக்கு வரும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
என்ன நன்மை
குழாய் எரிவாயு இணைப்பு பெற்றால், சிலிண்டர் தீர்ந்துவிடுமோ என்ற கவலை இல்லை. நீங்கள் பயன்படுத்தும் அளவிற்கு மட்டும் மாதம் ஒருமுறை பில் செலுத்தினால் போதும். மேலும், இது சிலிண்டரை விடப் பாதுகாப்பானது மற்றும் சுமார் 15% முதல் 20% வரை விலை குறைவாகவே இருக்கும்.
-
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு.. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.. சிலிண்டர் முன்பதிவு குறித்த உண்மைகள் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?














Click it and Unblock the Notifications