பில்லிசூனியம் எடுப்பதாக கூறி மோசடி.. ரூ 2 லட்சத்தை அபேஸ் செய்த 4 பேர் கைது.. போலி சாமியாருக்கு வலை
சென்னை: பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி டிரைவரிடம் ரூ 2 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி சாமியாரின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராஜகுமாரன் (45). இவருக்கு சொந்தமாக மினிவேன் உள்ளது.
இந்த நிலையில் சாமியார் ஒருவர், ராஜகுமாரனுக்கு யாரோ பில்லிசூனியம் வைத்துவிட்டதாகவும் அதை எடுக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என்றும் பயம் காட்டியுள்ளார்.

உறவினர்
பில்லி சூனியத்தை எடுக்க ரூ 2 லட்சம் பணமும் 2 கோழிகளுடனும் சென்னைக்கு வருமாறு அந்த சாமியார், ராஜகுமாரனிடம் கூறினார். இதை நம்பிய அவர் தனக்கென இருந்த வேனை விற்று அதில் கிடைத்த பணத்தில் ரூ 2 லட்சத்துடன் தனது உறவினர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.

நீண்ட நேரம்
ஸ்டான்லி மருத்துவமனை அருகே அவர்களை வருமாறு அழைத்த அந்த சாமியார் ரூ 2 லட்சத்தையும் கோழிகளையும் வாங்கிக் கொண்டு பூஜை பொருட்களை வாங்கி வருவதாக கூறிவிட்டு இருவரையும் அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் சாமியார் திரும்பாததால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

திருவள்ளூர்
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகுமாரன் வண்ணாரப்பேட்டை போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட கேமராவை வைத்து அந்த சாமியாரின் போன் எண்ணையும் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் மகிழம்பூ தெருவைச் சேர்ந்த யுவராஜ் (45) என்பது தெரியவந்தது.

அரக்கோணம்
இதையடுத்து தனிப்படை போலீஸார் அந்த இடத்திற்கு சென்று அவரது மனைவியையும் மகனையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் யுவராஜின் கூட்டாளிகள் அரக்கோணத்தை சேர்ந்த சுரேஷ் (34), சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த பாப்பா (56), மதுரை மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த அமர்நாத் (21), கொடுங்கையூரை சேர்ந்த ஜெயந்தி (29) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஏமாற்றி பணம் பறிப்பு
விசாரணையில் யுவராஜ், மற்றும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து சென்னை, ஆந்திரா, கோவை, மதுரை ஆகிய ஊர்களுக்கு சென்று அங்கு தனியாக இருப்பவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் கஷ்டம் என சொன்னால் உடனே பில்லிசூனியம் என கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்களை செய்து வந்தது தெரியவந்தது.

சாமியாருக்கு வலை
இதையடுத்து 4 பேரிடம் இருந்து ராஜகுமாரன் கொடுத்த ரூ 2 லட்சம் மற்றும் 2 கோழிகளை பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள போலி சாமியார் யுவராஜை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். ராஜகுமாரனையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications