கதவைத் தட்டிய போலீஸ்.. நள்ளிரவில் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் நடந்தது என்ன?
Recommended Video

சென்னை: நள்ளிரவில் வந்து போலீசார் தனது வீட்டு கதவை தட்டினார்கள் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆளும் கட்சியினருக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாகவும், அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சிகளை வைத்துள்ளதாகவும், அப்படத்தின் இயக்குனர் முருகதாஸுக்கு எதிராக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரி மாநிலம் தழுவிய அளவில் நேற்று அதிமுகவினர் போராட்டங்களை நடத்தினார்.
படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மாநில தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் உடன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு முருகதாசை கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின.
Police had come to my house late tonight and banged the door several times.Since I was not there they left the premises. Right now I was told there is no police outside my house.
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 8, 2018
இந்த தகவலை முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். நள்ளிரவில் போலீசார் தனது வீட்டுக்கு வந்து கதவை பலமுறை தட்டியதாகவும், தான் வீட்டில் இல்லை என்பதால் அவர்கள் திரும்பி சென்று விட்டதாகவும், தற்போது தனது வீட்டுக்கு வெளியே போலீசார் இல்லை என்றும் அந்த டுவீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications