சென்னையில் பெண்களிடம் தங்க நகை பறிக்கும் நயவஞ்சக நளினிகள்.. நம்பவே முடியாத தில்லாலங்கடி பாணி
சென்னை: சென்னையில் பெண்களை குறிவைத்து மயக்க மருந்து கலந்த பொருட்களை கொடுத்து நகைகளை பறிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னை அயனாவரத்தில் பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் ஒருவரிடம் நகை பறித்ததாக தாயும், மகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் எச்சரித்துள்ளனர். இதுபற்றி பார்ப்போம்.
சென்னையில் பெண்களிடம் பெண்களே நகை பறிக்கும் கலாசாரம் தற்போது அதிகரித்துள்ளது. மயக்க மருந்து கலந்த பொருட்களை கொடுத்து மயக்கி பெண்களிடம் நகைகளை பறிப்பது அதிகரித்துள்ளது. நகைப்பறிப்பில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் சாதாரண இல்லத்தரசிகள் போலவோ அல்லது கல்லூரிப் பெண்கள் போலவோ உடை அணிந்து வருகிறார்கள்.

வழியில தனியா வர்ற வயசான பெண்களை நிறுத்தி, ரொம்ப மரியாதையா "அம்மா, இந்த அட்ரஸ் எங்க இருக்கு?"ன்னு கேட்டு அவங்க கவனத்தைத் திசைதிருப்புவார்கள். சில நேரங்களில் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு உதவி கேட்பது போல நடித்து, அருகில் வந்தவுடன் நகையைப் பறிக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையோடு வரும்போது யாருக்கும் சந்தேகம் வராததுதான் இவர்களுக்குப் பெரிய சாதகம் ஆகும்.
சென்னை மாநகரப் பேருந்துகள்மற்றும் புறநகர் ரயில்களில் இந்த 'லேடி கேங்' ரொம்ப ஆக்டிவாக இருக்கிறார்கள். ஏறும்போதும் இறங்கும்போதும் தள்ளுமுள்ளுவை ஏற்படுத்தி, ரொம்ப நைஸா தங்கச் சங்கிலியை அறுத்துவிடுவதும் நடக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் கத்தினால் கூட, "நானும் ஒரு பொண்ணுதான், என் மேல எப்படி சந்தேகம் வரலாம்?"னு சென்டிமென்டா பேசி அங்கிருந்து நழுவிவிடுவதும் நடக்கிறது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்த தங்கம்மாள் என்பவரிடம் மயக்க மருந்து கலந்த ஜீஸ் கொடுத்து 5 பவுன் நகையை பறித்த அதே மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த நான்சி நிஷா என்பவர் கைதானார். சிறையில் அடைக்கப்பட்ட நான்சி நிஷா 2 வாரங்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த உடன் நான்சி நிஷா மீண்டும் கைவரிசையை காட்டியுள்ளார். தான் வேலைபார்த்த எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு நர்சாக வேலை பார்க்கும் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுனதா (வயது 31) என்பவரிடம் அன்பாக பேசியிருக்கிறது. நான்சி ஜெயிலுக்கு போன விஷயம் சுனதாவுக்கு தெரியவில்லை. இதனால் நான்சியுடன் அவர் அன்பாக பழகி இருக்கிறார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நான்சி நிசா, சுனதாவின் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார்.
சுனதாவும் நம்பிக்கையுடன் அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வழியில் சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு நான்சி அழைத்துள்ளார். சுனதாவும் நான்சியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் வைத்து மயக்க மருந்து கலந்த காளான் சூப்பை சுனதாவுக்கு கொடுத்துள்ளார். அதை குடித்த சுனதா உடனே மயங்கி விழுந்துவிட்டார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை நான்சி கழற்றி வைத்து கொண்டார்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த சுனதா தனக்கு என்ன நேர்ந்தது என்று நான்சியிடம் கேட்டுள்ளார். திடீரென்று மயக்கமாகிவிட்டாய் என்றும், இதனால் உன்னை கட்டிலில் படுக்க வைத்தேன் என்றும் நான்சி தெரிவித்தார். பின்னர் சுனதாவை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து ரயிலில் அவரை ஏற்றி ஆதம்பாக்கத்திற்கு போகும்படி சுனதாவை அனுப்பிவிட்டார்.
தனக்கு அவசர வேலை இருப்பதாகவும், தன்னால் தற்போது உனது வீட்டிற்கு வர முடியாது என்றும், இன்னொரு நாள் வருகிறேன் என்றும் சுனதாவிடம் நான்சி கூறினாராம். கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி பறிபோனது தெரியாமல் சுனதா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு போய் பார்த்த பிறகுதான் கழுத்தில் கிடந்த தனது தங்க சங்கிலியை காணாததை கண்டு சுனதா அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசில் சுனதா புகார் அளித்தார். சைதாப்பேட்டை போலீசார் 2-வது முறையாக மயக்க மருந்து மோகினி நான்சியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சுனதாவிடம் பறித்த தங்க சங்கிலியை உருக்கி அதை தங்க கட்டியாக மாற்றிய நான்சி வியாசர்பாடியில் உள்ள அடகு கடையில் அதை அடமானம் வைத்து பணம் வாங்கியிருக்கிறார். போலீசார் அந்த தங்க கட்டியை மீட்டார்கள்.
இதேபோல் சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் டெய்லர் தொழில் செய்யும் சுஜாதா என்ற பெண் தனியாக இருந்தார். அவரிடம் நைசாக பேசி, மயக்க மருந்து கலந்த பால்கோவா கொடுத்து 5 பவுன் நகையை ரவணம்மா என்ற பெண் பறித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னை அயனாவரத்தில் பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் ஒருவரிடம் நகை பறித்ததாக தாயும், மகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி சென்னையில் மயக்க மருந்து மோகினிகளின் இந்த அட்டூழியம் தொடர்கதையாக இருககிறது. இதுவரை 4 பேர் கைதாகியுள்ளனர். மயக்க பிஸ்கட் மற்றும் பால்கோவா, பாயாசம் கொடுத்து நகைகளை பறிக்கும் கும்பல்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications