இலங்கை தாக்குதல் எதிரொலி.. சிஎஸ்கே போட்டிக்கு பலத்த பாதுகாப்பு.. சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் நடக்கும் சிஎஸ்கே - எஸ்ஆர்எச் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் நடக்கும் சிஎஸ்கே - எஸ்ஆர்எச் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று முதல்நாள் பெரிய தொடர் குண்டுவெடிப்பு அசம்பாவிதம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள்.இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு அதிகம்
இந்தியா இலங்கை எல்லையிலும் பாதுகாப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகம் ஆகியுள்ளது. தமிழ்நாடு இலங்கை அருகே இருக்கும் பகுதி என்பதால் இங்கும் ஊடுருவல் நடக்க வாய்ப்புள்ளது என்று இங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி
இந்த சம்பவங்களுக்கு இடையில்தான் இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.இதனால் தற்போது சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

என்ன நடக்கும்
எல்லா ரசிகர்களும் பலத்த சோதனைக்கு பின்பே போட்டியை காண அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் ரசிகர்கள் எல்லோருடைய பைகள், கார்கள், பைக்குகள் எல்லாம் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. எப்போதும் சென்னை அணி விளையாடும் போது சிஎஸ்கே கேப்டன் தோனியை பார்க்க ரசிகர்கள் வேகமாக மைதானத்திற்குள் செல்வது வழக்கம். இப்போது அதை தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்ன நடவடிக்கை
அதையும் மீறி செய்யும் ரசிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு 100 போலீசார் என்று 1000 போலீசார் கூடுதலாக இன்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் தயார் நிலையில் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications