சென்னையில் அனுமதியின்றி பேரணி..அண்ணாமலை உள்பட 3,500 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

காவல்துறை அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து சென்னையில் காவல்துறை அனுமதியின்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Police registered a case against 3,500 people including Annamalai in Chennai

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழக பாஜக முன்வைத்து வருகிறது. அவ்வப்போது ஆளுநரை சந்தித்து புகார் மனுவும் அளித்து வருகிறார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.உண்ணாவிரதத்தின் நிறைவாக, மாலையில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் ஓமந்தூரார் எஸ்டேட் முதல் போர் நினைவுச்சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு பயமில்லை. சிசிடிவியில் முகத்தை கட்டிக்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். அதன் ஒருபகுதியாகத்தான் திமுக கவுன்சிலர் இக்கொலையை தைரியமாக செய்திருக்கிறார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறு கண்டனம் கூடதெரிவிக்கவில்லை. மெழுகுவர்த்தியை போல் திமுகவின் ஆட்சியும், விரைவில் உருக்குலைய தான் போகிறது என்று கூறினார்.

Police registered a case against 3,500 people including Annamalai in Chennai

இந்த நிலையில், சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரு.நாகராஜன் தலைமையில் பேரணி நடந்தநிலையில் 3,500 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+