மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்! சிபிசிஐடிக்கு மாற்றம்!
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகள் கொடுத்த பாலியல் தொல்லை புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் பாலியல் தொல்லை புகார்கள் புற்றீசல்களாக கிளம்பி வருகின்றன.

சுஷில் ஹரி பள்ளி
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியும் பாலியல் தொல்லை சர்ச்சையில் சிக்கியது. ஆனால் இந்த பள்ளியின் நிர்வாகியான சாமியார் சிவசங்கர் பாபா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

குழந்தைகள் ஆணையம்
இதனிடையே தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சிவசங்கர் பாபா உள்ளிட்ட நிர்வாகிகளை விசாரணைக்கு அழைத்தது. ஆனால் இந்த விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. மேலும் சிவசங்கர் சார்பாக ஜானகி என்பவர் ஆஜராகி இருந்தனர்.

நெஞ்சுவலி நாடகம்
சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கைதில் இருந்து தப்பிக்கவே சிவசங்கர் பாபா நெஞ்சுவலி நாடகமாடுவதும் அம்பலமானது.

பாய்ந்தது போக்சோ
இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் கேளம்பாக்கம் போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் சிவசங்கர் பாபா மீதான இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றபப்ட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications