விடாமல் விரட்டிய போலீஸ்.. கிருஷ்ணகிரி ரிசார்ட்டில் பதுங்கியிருந்த ஜெயகோபால்.. அதிரடி கைது
ஒகேனக்கல்லில் ஜெயகோபால் இருப்பதாக துப்பு கிடைத்துள்ளது
Recommended Video
சென்னை: சென்னை: தமிழக போலீசாரின் தீவிரமான 2 வார கால தேடுதல் வேட்டைக்கு பிறகு, சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகோபால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சுபஸ்ரீ இறந்து இத்தனை நாள் ஆகியும், சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலரை பிடிக்க முடியாமல் இருந்தது. சுபஸ்ரீ இறந்த தினம் முதலே இவர் காணாமல் போய்விட்டார்.
இவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.. மாயமான இவரை கண்டுபிடிக்கவும் தனிப்படையும் ஜெயகோபாலை பிடிக்க பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் இவரை கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்தது.

ஹைகோர்ட்
நாக்கை பிடுங்கி கொள்வது போல் ஐகோர்ட் கேள்வி கேட்கவும்தான் தேடுதல் வேட்டை படு விரைவானது. "முக்கிய குற்றவாளி ஜெயகோபாலை ஏன் கைது செய்யவில்லை, அவரும் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா" என்று கேள்வி கேட்கவும், "விரைவில் கைது செய்யப்படுவார்" என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்தது.

தனிப்படை
இதையடுத்துதான், நேற்று, பள்ளிக்கரணையில் பேனரை அகற்றாத இன்ஸ்பெக்டர் மீது தமிழக அரசு துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றொரு புறம், மேலும் தனிப்படைகள் அதிகரிக்கப்பட்டு ஜெயகோபாலை பிடிக்க ஆயத்தமானார்கள். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் ஜெயகோபால் வீட்டிலும் நோட்டிஸ் ஒட்டினார்கள்.

ஒகேனக்கல்
இந்நிலையில், ஜெயகோபால் ஒகேனக்கல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. இதற்காகவே 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஆளுக்கு ஒரு டீமாக பிரிந்து ஜெயகோபாலை தேடும் பணியில் இன்று ஈடுபட்டனர்.அங்கிருக்கும் முக்கிய ஹோட்டல்கள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள தெரிந்தவர்களின் வீடுகளில் ஜெயகோபால் மறைந்து இருக்கலாம் என்பதால் தீவிரமாக தேடி வந்ததால், முக்கிய குற்றவாளியை கிட்டத்தட்ட நம் போலீசார் நெருங்கி விட்டதாகவே கருதப்பட்டது.

பரபரப்பு
இந்நிலையில், தற்போது கிருஷ்ணகிரியில் ஜெயகோபாலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இரு வாரங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி வந்த ஜெயகோபால் தற்போது கைதாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபாஷ் போலீஸ்
ஆளும் தரப்பை சார்ந்த நபர் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ஜெயகோபாலை கைது செய்துள்ளது, போலீசார் மீதான மக்களின் நம்பிக்கையையும் பிடிப்பையும், நெருக்கத்தையும் மேலும் அதிகமாக்கி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மகளை பறிகொடுத்து கலங்கி கொண்டிருக்கும் அந்த ஜீவன்களுக்கு, இந்த குற்றவாளியின் கைது நடவடிக்கை ஒரு சொற்ப ஆறுதலை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications