உளவுத்துறை தந்த ‛வார்னிங்’.. திருமாவளவனின் போலீஸ் பாதுகாப்பு திடீர் அதிகரிப்பு.. என்ன நடந்தது?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாளவனுக்கு திடீரென்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பின்னால் உளவுத்துறை கொடுத்த முக்கிய வார்னிங் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை என்பது மாறுபடும்.

தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் சமீபத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விஜயகாந்த் வீட்டுக்கு வழங்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு என்பது திரும்ப பெற்ப்பட்டத.
இத்தகைய சூழலில் தான் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு என்பது திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது திருமாவளவனுக்கு எப்போதும் பிஎஸ்ஓ எனும் தனி பாதுகாவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இன்னொரு பிஎஸ்ஓ மற்றும் ஒரு காவலர் என மொத்தம் 2 பேர் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளனர்.
இதனால் திருமாளவனின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை ஒன்றில் இருந்து 3 ஆக அதிகரித்துள்ளது. திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு அதிகரிக்க முக்கிய காரணம் என்பது உளவுத்துறை கொடுத்த முக்கிய எச்சரிக்கை தான் என கூறப்படுகிறது. அதாவது திருமாவளவனின் சமீபத்தில் பேச்சுக்களால் அவருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாலும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் உளவுத்துறை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தான் தமிழக அரசு சார்பில் திருமாவளவனுக்கு இந்த பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள அவரது வீட்டருகே மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அவருக்கு மிரட்டல் இருந்தும் தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தான் தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை புதிய அறிக்கைகளை அரசுக்கு வழங்கி உள்ள நிலையில் முதற்கட்டமாக திருமாளவனுக்கான போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தனக்கும், விசிக தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது திருமாவளவனுக்கு மட்டுமே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications