சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை ஷாக்.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த பெண்ணை வழி மறித்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்!

Google Oneindia Tamil News

சென்னை: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    மதுரை: போலீஸ் செய்யுற வேலையா இது... சிக்கிய காமுகன் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

    மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் தனது கடையில் பணிபுரியும் பெண் ஊழியருடன் கடந்த சனிக்கிழமை இரவு திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர்.

     கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்! கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

    திரைப்படம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது நேதாஜி சாலை அருகே இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் முருகன் (35) என்பவர் இருவரையும் நிறுத்தி விசாரணை செய்த பின் மகேஷ்குமார் தனியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதோடு, சந்தேகமாக இருப்பதால் அவருடன் வந்த இளம்பெண்ணை தானே வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துவருவதாக கூறி மிரட்டி அனுப்பியுள்ளார்.

     தியேட்டர் போய் வந்தார்கள்

    தியேட்டர் போய் வந்தார்கள்

    மேலும், சுரேஷ்குமாரின் செல்போன் மற்றும் பர்சை பறிமுதல் செய்துகொண்டதோடு அவருடைய ஏடிஎம் பின் நம்பரையும் கேட்டு வாங்கியுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை தனது வாகனத்தில் அழைத்துசென்றுள்ளார் மகேஷ்குமார். அப்போது திடீரென அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

    மிரட்டி பலாத்காரம்

    மிரட்டி பலாத்காரம்

    நான் சொல்றபடி செய்யாவிட்டால், விபச்சார வழக்கு பதிவு செய்துவிடுவேன் என கூறி பெண்ணை மிரட்டி, நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் காவலர் முருகன். பின்னர் யாரிடமும் இதனை தெரிவிக்க கூடாது என்று கூறி ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து மகேஷ்குமாரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துள்ளார்.

    தற்கொலை முயற்சி

    தற்கொலை முயற்சி

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடும் மனச்சோர்வு அடைந்தார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்களே என்ற விரக்தியால், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், மகேஷ்குமார் மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    சஸ்பெண்ட்

    சஸ்பெண்ட்

    இதையடுத்து, காவலர் முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, காவலர், முருகனை மதுரை கமிஷனர் சிம்ஹா சஸ்பெண்ட் செய்ய உத்தவிட்டார். அதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    English summary
    The policeman who raped the girl has been suspended and charged under 5 sections in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X