தமிழ்நாடு, மேற்கு வங்கம்.. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எகிறும் வெயில்! உஷார் மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இரண்டு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இயல்பை விட 2 - 3°C வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் 38°C வரை வெப்பம் பதிவாகலாம். ஆனால், காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக இது 43°C வெப்பத்தைப் போல உணரப்படும். வேலூர், கரூர் மற்றும் திருச்சி போன்ற உள் மாவட்டங்களில் வெப்பம் 40°C-ஐத் தொட வாய்ப்புள்ளது என சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

tamil nadu West Bengal

அதேபோல மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, பல மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டி பதிவாகி வருகிறது. புருலியா மற்றும் கிழக்கு பர்த்வான் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலும் ஈரப்பதமும் சேர்ந்து வாக்காளர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் என அலிபூர் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், தேர்தல் ஆணையம் மற்றும் சுகாதாரத் துறை வாக்காளர்களுக்குப் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மதிய நேரத்தைத் தவிர்த்து, காலையிலேயே அல்லது மாலை 4 மணிக்கு மேல் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்றும், போதிய அளவு தண்ணீர், இளநீர் அல்லது மோர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள் எனவும், குடை, தொப்பி அல்லது கைக்குட்டையைப் பயன்படுத்துங்கள். தளர்வான பருத்தி உடைகளை அணிவது சிறந்தது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+