காவல்துறைக்கு கெளரவம் சேர்த்த கம்பீர மீசை.. முறுக்கி விட்டு தட்டிக் கொடுத்த ஹைகோர்ட்!
Recommended Video

சென்னை: காவல் துறைக்கு கௌரவமும் சிறப்பையும் சேர்த்த கம்பீர மீசைக்கு சொந்தகாரரான பொன் மாணிக்கவேல் ஓய்வு பெறும் நாளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேர்மை, நியாயம், நீதி, விடாமுயற்சி ஆகியவை இருந்தால் பேரும், புகழும் நம்மை வந்து சேரும் என்பார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அரசு அதிகாாிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கனகச்சிதமாக பொருந்தும்.
மேற்கொண்ட விஷயத்தை கடைப்பிடிக்காதவர்களின் பெயர் எந்த அளவுக்கு ரிப்பேர் ஆகியுள்ளது என்பதை நாம் அறிவோம். அது போல் நான்கையும் கடைப்பிடித்தால் தமக்கும் தமது துறைக்கும் கம்பீரத்தையும் கௌரவத்தையும் சேர்த்துவிடும் என்பதையும் யாரும் அறியாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

சிங்கப்பூர்
இதற்கு மிக பொருத்தமான உதாரணம் பொன் மாணிக்கவேல். அவர் தனது காவல் பணியை உயிர் மூச்சாக கருதினார். தான் இருக்கும் துறைக்கும் தாம் மேற்கொண்டிருந்த சிலை கடத்தல் சவால்களையும் எப்படியாயினும் எதிர்கொள்ள வேண்டும் என நினைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொறுப்பேற்ற இந்த இரு ஆண்டுகளாக சிங்கப்பூர் வரை ஓடினார்.

புளி கரைப்பு
இன்று ஓய்வு பெறும் நாள் வரை அவரால் எந்த அளவுக்கு வேகம் காண்பிக்க முடியுமோ அந்த அளவுக்கு வேகம் காட்டி எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அந்த துறைக்கு செய்து விட்டார். பொன் மாணிக்கவேல் ஒவ்வொரு சிலை கடத்தல்ககாரர்களாக கண்டுபிடிக்க கண்டுபிடிக்க பெரும் தலைகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.

ஆதங்கம்
இன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார் என்றவுடன் நிம்மதி அடைந்தனர். அவருக்கு நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில் கூட முழு நிறைவுடன் விடை பெறுகிறேன் என்றார். எனினும் இன்னு்ம சிலை கடத்தல் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போயிற்றே ஆதங்கம் அவர் மனதுக்குள் இருந்தது. அது கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு மூலம் வெளிப்பட்டது.

தட்டிக் கொடுத்தல்
இந்த தீர்ப்பை அவர் சும்மா பெறவில்லை. இதன் பின்னால் அவரது நேர்மை, தொழில் பக்தி, உழைப்பு, துணிச்சல் ஆகியன இருந்தது. ஏற்கெனவே பல அதிரடிகளால் காவல்துறைக்கு கௌரவம் சேர்த்த பொன் மாணிக்கவேலின் மீசையை ஹைகோர்ட் மேலும் முறுக்கிவிட்டு தட்டிக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications