போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பொன்னார்.. சந்திப்பின் பின்னணி இதுதான்!
Recommended Video
சென்னை: போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்தததற்காக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி எனப்படும் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
இதற்கான அறவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார். இதற்கு ரஜினிகாந்த் பதிலுக்கு நன்றியும் தெரிவித்தார்.

வாழ்த்து
ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் பூரிப்பில் உள்ளனர். அத்துடன் அவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
|
பொன்னார்
இந்த நிலையில் சென்னை போயஸ் தோட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்றிருந்தார். அங்கு ரஜினிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பு ஏன் என அரசியல் விமர்சகர்கள் பலவிதமான கருத்துகளை யூகித்து வந்த நிலையில் பொன்னாரே அதற்கான விடையை தந்துவிட்டார்.
|
வாழ்த்துகள்
இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவில் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் #IconOf_Golden_Jubilee விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களை நேரில் சந்தித்து எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

அரசியல்
அவர் இன்னும் பல சாதனைகள் புரிய எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். என்னதான் வாழ்த்துகளை தெரிவிக்கவே சந்தித்ததாக குறிப்பிட்டாலும் அரசியல் குறித்து எதையும் பேசாமலாக இருந்திருப்பார்கள் என்பதே அரசியல் பார்வையாளர்களின் சந்தேகம் ஆகும்.












Click it and Unblock the Notifications