சென்னையிலிருந்து பொங்கலுக்காக ஊருக்கு போறீங்களா? குட்நியூஸ் சொன்ன ரயில்வே! இந்த ரயில் உங்களுக்குதான்
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக, சென்னையிலிருந்து சொந்த செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரிலிருந்து தென்காசி வரை செல்லும்.
விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி வழியாக இந்த ரயில் தென்காசியை சென்று சேர்கிறது. இன்றிரவு எழும்பூரிலிருந்து 11.50க்கு புறப்படும் இந்த ரயில் 8 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 8 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டிருக்கிறது.

சிறப்பு ரயில்கள்
இது தவிர, சென்னை-நாகர்கோவில்/கன்னியாகுமரி வழித்தடத்தில் நேற்று தொடங்கி ஜன.17 வரை 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி வழித்தடத்தில்.. 06029, 06030, 06097, 06098 என 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை-ராமேஸ்வரம் வரை மானாமதுரை வழியாக ஜன.20, 21 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்டரலிலிருந்து மங்களூருக்கு, இன்று 06126 எண் கொண்ட சிறப்பு ரயிலும், நாளை 06125 எண் கொண்ட சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.
சென்னை-கோவைக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வழித்தடத்தில் ஜன.12 தொடங்கி 18ம் தேதி வரை 06034 மற்றம் 06033 எண் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜன.14 தொடங்கி 21ம் தேதி வரை இந்த வழித்தடத்தில் 06024 மற்றும் 06023 என இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications