Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசின் பொங்கல் பரிசு பணம் ரூ.3 ஆயிரம்.. யாருக்கெல்லாம் கிடைக்காது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகை ரூ.3 ஆயிரம் யாருக்கு எல்லாம் கிடைக்காது என்பதை பார்க்கலாம். அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகை அளிக்கப்பட உள்ள நிலையில், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. இதனால் தகுதி அடிப்படையில் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பாக பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு தரப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்க உள்ளதாக தெரிய வந்தது.

Pongal Cash Prize

கடந்த ஆண்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டுமே அளிக்கப்பட்டதால், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ரொக்கம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இது தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்தின் போது கூட பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2,500 அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை அதனை விடவும் அதிகமாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பிலேயே அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடைக்காது.

இதனால் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்போர், தகுதி அடிப்படையில் அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய ரேஷன் அட்டைகள் தகுதியான பயனாளிகள் பலருக்கும் அளிக்கப்படவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன் அவர்களின் ரேஷன் கார்டுகள் ஆக்டிவ் ஆகவில்லை என்றால், லட்சக்கணக்கானோருக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+