காணும் பொங்கல் கொண்டாட்டம்.. மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார்
சென்னை: காணும் பொங்கல் கொண்டாட்டத்தையடுத்து மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தை முதல் நாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 17-ஆம் தேதி காணும் பொங்கல் அன்று பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வர்.

சென்னையை பொருத்தவரை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை கழித்து வருவார்கள். அன்று காலை இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் உணவு பொருட்களை அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள்.
மாலையில் வீடு திரும்புவார்கள். மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
மெரினாவில் கடலில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காகவும் மெரினாவில் இறங்குகிறார்களா என்பதை பார்வையிடவும் கடற்கரையில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை முழுவதும் 6 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கிருந்தபடி பைனாகுலர் மூலம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கடலில் இறங்குபவர்களை கட்டுப்படுத்த குதிரை படை வீரர்களும் இப்போதே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மற்றும் போலீஸ் அதிகாரியின் செல்போன் எண்கள் இடம்பெறும் வளையமும் கட்டப்படுகிறது.
மெரினா தவிர்த்து வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications